சனி, 10 நவம்பர், 2012

<>அன்பா?,செல்வமா?,அதிட்டமா?<>



கிலன் தன் தாய் தந்தையுடன் அந்த ஊரில் வசித்துவந்தான்.
ஒருநாள் அவன் வீடட்டின் முன் மூன்று பேர்கள் வந்தார்கள்.  வந்தவர்கள் ' உள்ளேவரலாமா ' என்று கேட்டனர்.

அகிலனின் தந்தையோ 'உள்ளே வாருங்கள்' என்றார்.

'நாங்கள் மூவரும் ஒன்றாக உள்ளே வரமுடியாது...யாராவது ஒருவர் தான் உள்ளே வரமுடியும்...என் பெயர் செல்வ‌ம்...இவர் பெயர் அதிட்டம்...இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்...எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்' என்றார் செல்வ‌ம் என்பவர்.

இதனிக் கேட்ட அகிலனின் தந்தை வீட்டுக்குள் சென்று மனைவி மகனிடம் இதைச் சொன்னார். சொல்லிவிட்டு தனது கருத்தையும் சொன்னார்.

அதிட்டத்தை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் அதிட்டம் நம் பக்கம் இருந்தால் அதுவே போதும் என்றார்.

ஆனால் அகில‌னோ ...'அப்பா செல்வ‌த்தையே உள்ளே அழைக்கலாம்...நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்...எல்லாவற்றையும்..அதிட்டம் ..உட்பட ...அனைத்தையும் வாங்கலாம்' என்றான்.

ஆனால் அகில‌னின் தாயோ 'அதெல்லாம் எதுவும் வேண்டாம்...அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்' என்றாள்.

பின் மூவரும் ஒருமனதாக, 'அன்பு உள்ளே வரட்டும்' என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து அதிட்டமும், செல்வ‌மும் கூட உள்ளே நுழைந்தனர். உடன் குமரனின் அம்மா"அன்பை" மட்டும் தானே உள்ளே அழைத்தோம், என்றார்.

அன்பு சொன்னார்,' நீங்கள் செல்வ‌த்தையோ, அதிட்டத்தையோ அழைத்திருந்தால்..மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம். ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்..நான் இருக்கும் இடத்தில் தான் செல்வ‌மும், அதிட்டமும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்'

"அன்பு" மட்டும் இருந்தால்..நம் வாழ்வில் அதிட்டமும்,தேவையான செல்வங்களும் தானாகவே வந்துவிடும்.

அன்பே அனைத்தும்...அன்பே முக்கியம் என்பதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?

இதையே வள்ளுவப் பெருந்தகை.....

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்
என்று கூறுகிறார்.

நீதி:- அன்பு ஒன்றுக்குத்தான்  எல்லோரையும் இணைக்கும்,பிணைக்கும் சக்தி உண்டு என்பதை உணரலாம்.

ஆல்பர்ட்,அமெரிக்கா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக